உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி (T.H.R.T. Chandrasiri) தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துத் தேவைகளை எளிதாக்கும் வகையில் இன்று (10) முதல் பரீட்சை காலம் முடியும் வரை விசேட பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தொடருந்து சேவைகள்
இதேவேளை அனைத்து திட்டமிடப்பட்ட தொடருந்து சேவைகளும் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைக் காலத்தில் எந்தவித தாமதமோ அல்லது இரத்துகளோ இல்லாமல் தொடருந்து சேவைகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று ஆரம்பமான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |