காட்டுமிராண்டியான சட்டத்தை இல்லாது ஒழிக்கவே கையெழுத்து வேட்டை!
பயங்கரவாத சட்டமானது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும். மனித குலத்திற்கு தேவையற்றதாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை பகுதியில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் தலைமையில் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இந்த கையெழுத்து போராட்டமானது இலங்கையில் காணப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல் செய்வதற்காகவே ஆகும்.1979 ஆண்டு பயங்கரவாத சட்டமானது இலங்கையில் உருவாக்கப்பட்டது.
அது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும். ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட மனித உரிமை பட்டயத்தில் கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் எதிராக கூறப்பட்ட சட்டமாகும்.
மனித குலத்திற்கு தேவையற்றதாகும். இயற்கை நீதி விதி கோட்பாட்டிற்கு எதிரான ஒரு சட்டம். இந்த சட்டத்தின் ஊடாக ஒருவர் கைது செய்யப்பட்டால் தன்னுடைய கருத்தை சொல்வதற்கு எந்த வாய்ப்பும் அவருக்கு கிடையாது என குறிப்பிட்டார்.
அத்துடன் உங்கள் ஒவ்வொருவரினதும் கையொப்பங்களும் உங்கள் பாதுகாப்புக்கானதும் உங்கள் சந்ததியின் பாதுகாப்புக்கானது ஆகும் என இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தத்தமது உரையில் குறிப்பிட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் காரைதீவு தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலாளர் நாயகமும் தற்போதைய உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் , இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் எஸ்.சேயோன், தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்கட்சி தலைவருமான குஞ்சுத்தம்பி ஏகாம்பரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்களான அழககோன் விஜயரட்ணம் சோ.குபேரன் தி.இராசரட்ணம், சந்திரசேகரம் ராஜன்,சிவலிங்கம்,சமூக சேவகர் தாமோதரம் பிரதீபன் உள்ளிட்ட பிரமுகர்கள் கையெழுத்திட்டனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 13 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்