பொது மைதானத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!
கல்முனை பொது மைதானம் ஒன்றில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வியாழக்கிமை மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பகுதியில் அமைந்துள்ள பொது மைதானத்தில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட சடலம்
இவர் அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறை பிரிவிற்குட்டபட்ட உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொது மைதானத்தில் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இனம் காணப்பட்ட தடயப்பொருள்
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை காவல்துறைக் குழுவினர் தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர். அதன் போது சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன.
சம்பவ இடத்திற்கு குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கல்முனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.