தென்னிலங்கை விடுதி ஒன்றிலிருந்து பெண்கள் கைது!
கொழும்பிலுள்ள விடுதி ஒன்றிலிருந்து பெண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி காவல்துறையினராலேயே விடுதி முற்றுகையிடப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரைட் ஹவுஸ் பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது அதன் முகாமையாளர் உட்பட 10 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதன் முகாமையாளராக கந்தானை பிரதேசத்தை 60 வயதான பெண்ணே செயற்பட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட பெண்கள் 27,32,33,41,42,52 வயதானவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அத்திட்டிய, களனி, ஓபநாயக்க, கொக்கரெல்ல, பிலியந்தலை, மாத்தறை, கண்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த திருமணமான பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உயர் தொழில் செய்வதாக கூறி, இந்த பெண்கள் வீடுகளில் இருந்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறையின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பாலியல் தொழில் விடுதி இயங்கிய கட்டடத்திற்கு மாத வாடகையாக மூன்று லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.