இந்திய விமான விபத்து : இலங்கை அரசு வெளியிட்ட பதிவு
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
‘எக்ஸ்’ இல் ஒரு பதிவில், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பல உயிர்கள் இழந்தது மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
“இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
Sri Lanka is deeply shocked and saddened by the tragic Air India plane crash in Ahmedabad 💔
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) June 12, 2025
“We extend our heartfelt condolences to the families of the victims and stand in solidarity with the people of India in this moment of grief 🇮🇳🙏#DiplomacyLk #LKA #PlaneCrash… pic.twitter.com/tgFbUYVTZG
பிரதமர் நரேந்திர மோடி வருத்தம்
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பதிலளித்த மோடி, தனது எக்ஸ் கணக்கில் ஒரு பதிவில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனுதாபம் தெரிவித்தார், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்தார்.
The tragedy in Ahmedabad has stunned and saddened us. It is heartbreaking beyond words. In this sad hour, my thoughts are with everyone affected by it. Have been in touch with Ministers and authorities who are working to assist those affected.
— Narendra Modi (@narendramodi) June 12, 2025
“அகமதாபாத்தில் நடந்த சோகம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மற்றும் வருத்தப்படுத்தியுள்ளது.
“இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, இதயத்தை உடைக்கிறது,” என்று மோடி கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டதுடன் அமைச்சர்கள் உட்பட இந்திய அதிகாரிகளுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
