ஒன்றுமே நடக்காது -இலங்கை அரசியல் அப்படித்தான்

Sri Lanka Final War Easter Attack Sri Lanka Sonnalum Kuttram
By Sumithiran Sep 07, 2023 01:34 AM GMT
Report

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேரை பலியெடுத்து பலரை காயப்படுத்திய கொடூர தாக்குதலான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து இன்று நான்கு வருடங்கள் கடந்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவே இல்லை.அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியான தீர்வும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சனல் 4 தற்போது இது தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்ட நிலையில் தென்னிலங்கையில் அரசியல்வாதிகள் மத்தியில் கூச்சல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

வன்னியில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள்

இது அல்லாவிற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என பேரினவாத அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.ஆனால் ஒருபடி மேலே போய் சனல் 4 இற்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் தீராப்பகை உள்ளதாக வேடிக்கையான கருத்தை தெரிவித்துள்ளார் நாமல் ராஜபக்ச.

ஒன்றுமே நடக்காது -இலங்கை அரசியல் அப்படித்தான் | Sri Lanka Easter Attack

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது கொத்து கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு இனப்படுகொலை நடந்தபோது அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைத்தது இலங்கை அரசு.

இல்லை அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என தக்க ஆதாரத்துடன் ஆவணப்படமொன்றை வெளியிட்டது சனல்4.ஆனால் என்ன நடந்தது தமிழ் மக்களுக்கு இதுவரை நீதியும் கிடைக்கவில்லை அது மறந்த விடயமும் ஆகிவிட்டது.

 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் 

ஒன்றுமே நடக்காது -இலங்கை அரசியல் அப்படித்தான் | Sri Lanka Easter Attack

இதேபோன்றுதான் தற்போதும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பதை விலாவாரியாக சம்பந்தப்பட்டவர்களின் நேர்காணல் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியது சனல் 4.இதில் முக்கியமானவர் பிள்ளையானின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா.

சரி இதற்கு பின்னால் அப்படி ஒன்றும் இல்லை என்றால் முறையான விசாரணையை ஆரம்பித்து குற்றவாளியை பிடிப்பது தானே முறை. அதனை ஏன் செய்யத் தயங்குகின்றது இலங்கை அரசு.

வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே தீர்வைப்பெற்றுத்தரும் என தமிழ் மக்கள் இன்றுவரை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் அதனை உதாசீனம் செய்து தட்டிக்கழித்து வருகிறது இலங்கை அரசாங்கம். தற்போது இலங்கைத்திருநாட்டின் சொந்த மக்கள் என கூறப்படும் சிங்கள மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் சர்வதே விசாரணை நடத்தப்பட வேண்டுமென தென்னிலங்கையில் கோரிக்கை வலுத்து வருகின்றது.

ஒன்றுமே நடக்காது

Black Video (1) from Ellalan on Vimeo.

ஆனால் இது எதுவும் நடக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்.வன்னியில் தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்றொழித்த இலங்கை அரசாங்கத்திற்கு வெறும் 269 பேர் பலியெடுக்கப்பட்டது என்பது பெரிதாகவா தெரியப்போகின்றது.

ஆக மொத்தத்தில் இந்த விடயமும் சில நாட்கள் பெரிதாக பேசப்படுமே ஒழிய வேறெதுவும் நடக்கப்போவதில்லை. ஏனெனில் இலங்கையின் அரசியலும் ஆட்சித் தலைவர்களும் அப்படி.

ReeCha
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024