விடுதலைப்புலிகளின் தலைவருக்கு ஆயுத கலாசாரத்தை கற்றுக்கொடுத்தது இவர்களே - முன்வைக்கப்பட்ட பாரிய குற்றச்சாட்டு!
நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது ஜே.வி.பி தரப்பே எனவும்1989ம் ஆண்டில் ஜே.வி.பி இந்த நாட்டுக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தியது எனவும் பாரிய குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
சிறிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளாகவிருந்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பன நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை என ஜே.வி.பி சுமத்தி வரும் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரட்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசார்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பியினரே எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
1971ம் ஆண்டு இந்த நாட்டுக்கு ஆயுத கலாச்சாரத்தை அறிமுகம் செய்தவர்கள் யார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். அதேவேளை ஜே.வி.பி சுமத்தும் குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே ஜே.வி.பியினர் அறிமுகம் செய்து வைத்த இந்த ஆயுதக் கலாசாரத்தையே பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கற்றுக்கொண்டார்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளை விடவும் இலங்கையில் பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஜே.வி.பியின் குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
