நாடாளுமன்றில் கெடுபிடி! பிரதி சபாநாயகரை சாடும் அரசியல்வாதிகள்

Parliament of Sri Lanka SLPP Anura Kumara Dissanayaka Lakshman Kiriella Ajith Rajapakse
By Eunice Ruth Apr 02, 2024 03:03 PM GMT
Report

கோரமின்மை காரணமாக இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.   

ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியை பிரிதிநிதித்துவப்படுத்தி 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று (2) நாடாளுமன்றில் உரையாற்றவிருந்ததாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவான உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்திருந்த நிலையில், நண்பகல் 1 மணியளவில் சபை ஒத்திவைக்கப்பட்டது.

வாக்குவாதம் 

இதையடுத்து, 4 மணியளவில் மீண்டும் நாடாளுமன்ற விவாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதி சபாநாயகருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் கெடுபிடி! பிரதி சபாநாயகரை சாடும் அரசியல்வாதிகள் | Sri Lanka Parliament Conflict Between Politicians

யாழில் திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்: உயிரிழந்த பெண்ணின் பெரு விரலில் மை

யாழில் திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்: உயிரிழந்த பெண்ணின் பெரு விரலில் மை

இந்த நிலையில், நாடாளுமன்ற விவாதங்களில் ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவான உறுப்பினர்கள் நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தால், அந்த நாளுக்கான விவாதத்தை ஒத்திவைக்காமல் முன்னெடுக்கலாமென எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, நாடாளுமன்றில் முன்னெடுக்கப்படும் முக்கிய விவாதங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டுமெனவும், குறைந்தளவான உறுப்பினர்களுடன் சில விவாதங்களை முன்னெடுக்க முடியாதெனவும் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோரமின்மை 

அத்துடன், ஒரு சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்கு போதிய கோரம் இல்லாவிட்டால், நாடாளுமன்றில் பிரசன்னமாகியுள்ள அமைச்சரவை அமைச்சர் ஒருவர் குறித்த சட்டமூலத்தை வாக்கெடுப்புக்குட்படுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் கெடுபிடி! பிரதி சபாநாயகரை சாடும் அரசியல்வாதிகள் | Sri Lanka Parliament Conflict Between Politicians

முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு : ரணில் விடுத்த அதிரடி பணிப்புரை

முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு : ரணில் விடுத்த அதிரடி பணிப்புரை

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் இதற்கு முன்னர், குறித்த சம்பிரதாயத்துக்கமைய முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை நிராகரித்த பிரதி சபாநாயகர், இன்று காலை நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றில் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சம்பிரதாயம் 

இதையடுத்து, நாடாளுமன்றத்தின் வரலாற்றில் இதுவரை உறுப்பினர் ஒருவர் வரும்வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதில்லை என அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் கெடுபிடி! பிரதி சபாநாயகரை சாடும் அரசியல்வாதிகள் | Sri Lanka Parliament Conflict Between Politicians

திருகோணமலையில் அந்நிய சக்திகளின் தலையீடு: போராட்டத்தில் குதித்த மக்கள்

திருகோணமலையில் அந்நிய சக்திகளின் தலையீடு: போராட்டத்தில் குதித்த மக்கள்

இதேவேளை, நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச மேற்கொண்ட தனிப்பட்ட தீர்மானம் காரணமாக தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட சட்டமொன்று தொடர்பான விவாதம் நடைபெறும் போது, நாடாளுமன்றில் பிரசன்னமாக வேண்டியது அனைத்து உறுப்பினர்களதும் பொறுப்பு எனவும், அவர்களது கவனயீனத்துக்கு ஆளுங்கட்சி பொறுப்பு கூற முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025