ஆளும் தரப்பு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல்!
பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா சமன்மலி குமாரசிங்கவிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கபப்ட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொலை அச்சுறுத்தல் விடுத்த நபரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொட்டகனத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கத்போவ ஊருகஸ்மங் ஹந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடன் பணத்தை வழங்காதது சம்பந்தமாக சந்தேக நபர், கீதா குமாரசிங்கவின் ஹம்புருகல பிரதேசத்தில் உள்ள வீட்டிக்கு சென்று, அவரை அச்சுறுத்தி, கொலை செய்ய போவதாக மிரட்டியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, காவல்துறையினருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி உட்பிரவேசித்து திட்டி, கொலை அச்சுறுத்தல் விடுத்தமை சம்பந்தமாக சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.