2026 இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டு இலக்கு! அமைச்சரின் அறிவிப்பு
இந்த ஆண்டு 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதே இலக்கு என்று தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துளாளர்.
2025 ஆம் ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு முதலீடு நாட்டிற்குள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சி ஆரம்பத்தில் சுமார் 3.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், 5% வளர்ச்சி வீதத்துடன் கடந்த ஆண்டு முடிவடைந்ததாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

2026 ஆம் ஆண்டை எதிர்நோக்கி, அரசாங்கம் பொது முதலீட்டிற்காக ரூ. 4,480 பில்லியனை ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பாக செயல்படுத்துவதில், முக்கியமான தேசிய உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்கட்டமைப்பு மேம்பாடு
பேரிடர் நிவாரண தொகுப்பின் ஒரு பகுதியாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அனில் ஜயந்த எடுத்துரைத்துள்ளார்.

இந்தத் தொகுப்பிற்காக ஒதுக்கப்பட்ட மொத்த ரூ. 500 பில்லியனில், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு ரூ. 250 பில்லியனை குறிப்பாக ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |