சுதந்திர தின வைபவத்தில் பலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
sri lanka
vavuniya
student
independence day
By Kalaimathy
வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டிருந்த பலர் மயக்கமடைந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 74 வது சுதந்திரதின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை கோலாகலமாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து நிகழ்வில் அணிநடையில் கலந்துகொள்ள வந்திருந்த மாணவர்கள் மற்றும் ஊர்காவற்படை வீரர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் திடீர் என மயக்கமடைந்து விழுந்தனர்.
இதனால் குறித்த நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. அதிக நேரம் வெயிலில் நின்றமையால் அவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகைச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்றது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி