இந்தியாவில் கப்பலில் இருந்து தவறி விழுந்த இலங்கையர் உயிரிழப்பு
சிங்கப்பூரை நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு கொள்கலன் கப்பலில் பணியாற்றிய இலங்கைச் சேர்ந்த பணியாளரின் உடல், ஹூக்ளி ஆற்றில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் நேதாஜி சுபாஷ் கப்பல்துறை அருகே நீரில் குதித்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் கூறுகையில், அவர் பணியாற்றிய கப்பலின் பெயர் ‘Kota Dunia’ ஆகும். இவர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்
அதேசமயம், அவரது குடும்பத்தினர் ஏதேனும் முறைப்பாடு அளிக்க விரும்புகிறார்களா என்பதை அறிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக கிடைத்த தகவலின்படி, உயிரிழந்தவர் இலங்கை நாட்டைச் சேர்ந்த பண்டாரவத்தை விதானெலகே பிரபாஷ்வர தரிந்து என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துறைமுகப் பிரிவு துணை ஆணையர் ஹரிகிருஷ்ண பாய் கூறுகையில்,
கப்பல் பணியாளர்
“வியாழக்கிழமை இரவு 11.26 மணியளவில், ஒரு கப்பல் பணியாளர் துறைமுகம் அருகே நதியில் குதித்ததாக தகவல் பெறப்பட்டது.
துறைமுக கடல் பிரிவின் இரண்டு டக் படகுகள் சுற்றியுள்ள நீரில் தேடுதல் பணியைத் தொடங்கின.
ஆனால் ஆரம்ப கட்ட தேடுதலில் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை,” என துணை ஆணையர் கூறியுள்ளார்.
உடல் கண்டெடுக்கப்பட்ட சரியான இடம் அல்லது அதன் நிலை குறித்து உடனடியாக விவரங்கள் வெளியிடப்படவில்லை. மரணத்திற்கான துல்லியமான காரணம் உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு மட்டுமே தெரிவிக்கப்படும் என்று இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |