உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்கள் மீதான தடை! ரணிலின் தவறை சுட்டிக்காட்டும் மனோ

Sri Lanka Upcountry People Mano Ganeshan Ranil Wickremesinghe Tiran Alles Sri Lanka
By Shadhu Shanker Dec 19, 2023 12:52 PM GMT
Report

புலம்பெயர்தமிழர்களுடன் பேசும் அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்நாட்டில் தமிழருக்கு தவறான சமிக்ஞைகளை தருகிறார் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்ட அறிக்கையொன்றில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, அழைத்து அதிபர் ரணில் பேசுவது நல்லதே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் உள்நாட்டில் தமிழருக்கு தொடர்ந்து தவறான சமிக்ஞைகளை தருகிறார்.

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை: சென்னைக்கு அனுப்பப்பட்ட விமானம்

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை: சென்னைக்கு அனுப்பப்பட்ட விமானம்

 மாகாணசபை தேர்தல்

இதில் ஒன்று, மக்களுடன் எந்தவித நேரடி தொடர்புகளும் இல்லாத அமைச்சர் டிரான் அலசின் பேச்சை கேட்டு, எனது தொகுதி கொழும்பில் மீண்டும் காவல்துறை பதிவுகளை ஆரம்பித்துள்ளமை ஆகும்.

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்கள் மீதான தடை! ரணிலின் தவறை சுட்டிக்காட்டும் மனோ | Sri Lankan Tamils Mano Ganeshan Ranil Wikramsinghe

இரண்டாவது, வடக்கு கிழக்கிலாவாது மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாண சபைகளை ஏற்படுத்த ரணில் தயாரில்லை என்பதாகும்.

மூன்றாவது, பாதீட்டில் ரணில் உறுதியளித்த, மலைநாட்டில் 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாமையாகும்.

ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற ஐயப்பன் பூஜை (படங்கள்)

ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற ஐயப்பன் பூஜை (படங்கள்)

மூன்று  கேள்வி

அதிபர் ரணில் விக்ரமசிங்கவை கடந்த வாரம் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து மூன்று விடயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி கோரிக்கை விடுத்தேன்.

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்கள் மீதான தடை! ரணிலின் தவறை சுட்டிக்காட்டும் மனோ | Sri Lankan Tamils Mano Ganeshan Ranil Wikramsinghe

தற்போது சனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பு சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளுக்கு மேலதிகமாக, உங்கள் அமைச்சர் டிரான் அலசின் காவல்துறை தமிழர்களின் வீடுகளுக்கு சிங்களம் மட்டும் படிவங்களுடன் அனுப்பி, சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளை செய்து, எனது தொகுதி கொழும்பில் வாழும் தமிழர் மத்தியில் தேவையற்ற பதட்டங்களை ஏன் ஏற்படுத்துகிறீர்கள்?

குறைந்தபட்சம் உடனடியாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலாவது மாகாணசபை தேர்தல்களை நடத்தி, அங்கே முதற்கட்டமாக மாகாணசபை நிர்வாகங்களை ஏற்படுத்தலாம். அதை ஏன் இழுத்து கொண்டே போகிறீர்கள்?

இலங்கை வீடமைப்பு திட்டங்கள்

மலைநாட்டு பெருந்தோட்டங்களில், நீங்கள் பாதீட்டில் உறுதியளித்த 10 பேர்ச் காணி துண்டுகளை, பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கலாம்.

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்கள் மீதான தடை! ரணிலின் தவறை சுட்டிக்காட்டும் மனோ | Sri Lankan Tamils Mano Ganeshan Ranil Wikramsinghe

இந்திய, இலங்கை வீடமைப்பு திட்டங்களின் வீடு கட்டும் பணிகள், அரச நிர்வாக கட்டமைப்புகளின் ஊடாக நடைமுறையாக தாமதம் ஆகும்.

ஆகவே காணி வழங்களுக்காக நீங்கள் ஒதுக்கிக்கொண்டுள்ள 400 கோடி ரூபாயை பயன்படுத்தி, காணிகளை பிரித்து வழங்கலாம்.

ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த பிரபல வீரர்

ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த பிரபல வீரர்

காணி வழங்கல் பொறுப்பு

ஆனால், இந்த 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள்?

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்கள் மீதான தடை! ரணிலின் தவறை சுட்டிக்காட்டும் மனோ | Sri Lankan Tamils Mano Ganeshan Ranil Wikramsinghe

இந்த கேள்விகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பதில் கூற வேண்டும்.அல்லது அவருடன் கூட்டு குடித்தனம் செய்கின்றவர்கள் பதில் கூற வேண்டும்.

இவை தொடர்பில் கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கா, இந்தியா, சுவிஸ், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ், தென்னாபிரிக்கா, இத்தாலி நாடுகளின் தூதுவர்களும் ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளின் துணை தூதர்களும், முதன்மை அதிகாரிகளும் கலந்துக்கொண்ட நிகழ்விலும் அவர்களுக்கு விளக்கமாக நான் எடுத்து கூறி இருந்தேன்” என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்