உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்கள் மீதான தடை! ரணிலின் தவறை சுட்டிக்காட்டும் மனோ

Sri Lanka Upcountry People Mano Ganeshan Ranil Wickremesinghe Tiran Alles Sri Lanka
By Shadhu Shanker Dec 19, 2023 12:52 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

புலம்பெயர்தமிழர்களுடன் பேசும் அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்நாட்டில் தமிழருக்கு தவறான சமிக்ஞைகளை தருகிறார் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்ட அறிக்கையொன்றில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, அழைத்து அதிபர் ரணில் பேசுவது நல்லதே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் உள்நாட்டில் தமிழருக்கு தொடர்ந்து தவறான சமிக்ஞைகளை தருகிறார்.

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை: சென்னைக்கு அனுப்பப்பட்ட விமானம்

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை: சென்னைக்கு அனுப்பப்பட்ட விமானம்

 மாகாணசபை தேர்தல்

இதில் ஒன்று, மக்களுடன் எந்தவித நேரடி தொடர்புகளும் இல்லாத அமைச்சர் டிரான் அலசின் பேச்சை கேட்டு, எனது தொகுதி கொழும்பில் மீண்டும் காவல்துறை பதிவுகளை ஆரம்பித்துள்ளமை ஆகும்.

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்கள் மீதான தடை! ரணிலின் தவறை சுட்டிக்காட்டும் மனோ | Sri Lankan Tamils Mano Ganeshan Ranil Wikramsinghe

இரண்டாவது, வடக்கு கிழக்கிலாவாது மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாண சபைகளை ஏற்படுத்த ரணில் தயாரில்லை என்பதாகும்.

மூன்றாவது, பாதீட்டில் ரணில் உறுதியளித்த, மலைநாட்டில் 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாமையாகும்.

ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற ஐயப்பன் பூஜை (படங்கள்)

ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற ஐயப்பன் பூஜை (படங்கள்)

மூன்று  கேள்வி

அதிபர் ரணில் விக்ரமசிங்கவை கடந்த வாரம் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து மூன்று விடயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி கோரிக்கை விடுத்தேன்.

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்கள் மீதான தடை! ரணிலின் தவறை சுட்டிக்காட்டும் மனோ | Sri Lankan Tamils Mano Ganeshan Ranil Wikramsinghe

தற்போது சனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பு சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளுக்கு மேலதிகமாக, உங்கள் அமைச்சர் டிரான் அலசின் காவல்துறை தமிழர்களின் வீடுகளுக்கு சிங்களம் மட்டும் படிவங்களுடன் அனுப்பி, சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளை செய்து, எனது தொகுதி கொழும்பில் வாழும் தமிழர் மத்தியில் தேவையற்ற பதட்டங்களை ஏன் ஏற்படுத்துகிறீர்கள்?

குறைந்தபட்சம் உடனடியாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலாவது மாகாணசபை தேர்தல்களை நடத்தி, அங்கே முதற்கட்டமாக மாகாணசபை நிர்வாகங்களை ஏற்படுத்தலாம். அதை ஏன் இழுத்து கொண்டே போகிறீர்கள்?

இலங்கை வீடமைப்பு திட்டங்கள்

மலைநாட்டு பெருந்தோட்டங்களில், நீங்கள் பாதீட்டில் உறுதியளித்த 10 பேர்ச் காணி துண்டுகளை, பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கலாம்.

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்கள் மீதான தடை! ரணிலின் தவறை சுட்டிக்காட்டும் மனோ | Sri Lankan Tamils Mano Ganeshan Ranil Wikramsinghe

இந்திய, இலங்கை வீடமைப்பு திட்டங்களின் வீடு கட்டும் பணிகள், அரச நிர்வாக கட்டமைப்புகளின் ஊடாக நடைமுறையாக தாமதம் ஆகும்.

ஆகவே காணி வழங்களுக்காக நீங்கள் ஒதுக்கிக்கொண்டுள்ள 400 கோடி ரூபாயை பயன்படுத்தி, காணிகளை பிரித்து வழங்கலாம்.

ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த பிரபல வீரர்

ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த பிரபல வீரர்

காணி வழங்கல் பொறுப்பு

ஆனால், இந்த 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள்?

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்கள் மீதான தடை! ரணிலின் தவறை சுட்டிக்காட்டும் மனோ | Sri Lankan Tamils Mano Ganeshan Ranil Wikramsinghe

இந்த கேள்விகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பதில் கூற வேண்டும்.அல்லது அவருடன் கூட்டு குடித்தனம் செய்கின்றவர்கள் பதில் கூற வேண்டும்.

இவை தொடர்பில் கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கா, இந்தியா, சுவிஸ், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ், தென்னாபிரிக்கா, இத்தாலி நாடுகளின் தூதுவர்களும் ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளின் துணை தூதர்களும், முதன்மை அதிகாரிகளும் கலந்துக்கொண்ட நிகழ்விலும் அவர்களுக்கு விளக்கமாக நான் எடுத்து கூறி இருந்தேன்” என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025