அடுத்தடுத்து கரையொதுங்கும் பிணங்கள்..! கோட்டா இரகசிய சித்திரவதை முகாமின் பின்னணி
அண்மை காலமாக கொழும்பில் கடற்கரை ஓரங்களில் இனம் தெரியாத பிணங்கள் கரை ஒதுங்குவதான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்த கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 6 ற்கும் மேற்பட்ட பிணங்கள் காலிமுகத்திடலை அண்டிய கடற்கரை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றிலும் குறிப்பாக கரைஒதுங்கிய சடலங்கள் சில கைகள் கட்டப்பட்டும், துப்பாக்கியால் சுடப்படும் இருப்பதாக வெளியாகிய தகவல்கள் மக்களை மிகுந்த அச்சத்துக்குள்ளாக்கி வருகின்றன.
குறிப்பாக வெள்ளவத்தை கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்களை விட ஏனைய சடலங்கள் இது வரை அடையாளம் காணப்படவில்லை என்பது பரந்த அளவில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றது.
சிறிலங்காவின் போரியல் தந்திரம்
இவ்வாறு கரை ஒதுங்கும் பிணங்கள் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்றும் முகமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையா என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
பிணங்களின் ஊடக மக்களை அச்சுறுத்தி அவர்களை ஆட்சி செய்வது சிறிலங்கா அரசுக்கு புதியது அல்ல... இது சிறிலங்காவின் போரியல் தந்திரம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள்.
நடுக்கடலில் வைத்து கொலை செய்யப்பட்டு கரையொதுங்கும் பிணங்கள் காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடையதாக இருக்கலாம் எனவும் அல்லது 2009 பிற்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யபட்ட , கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
'Gotta Camp' இரகசிய சித்திரவதை முகாமும் கடலில் மிதக்கும் பிணங்களும் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது எமது உண்மையின் தரிசனம் ஒளியாவணம்,
(குறித்த ஒளியாவணத்தை பார்வையிட WATCH ON YOUTUBE என இருக்கும் இணைப்பை அழுத்துங்கள்)
தொடர்புடைய செய்தி
கொழும்பில் மிதக்கும் பிணங்கள்! கதறக் கதறக் கைதுகள் - நடப்பது என்ன..! |