யாழின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை
சட்டவிரோத செயற்பாடுகள் கலசார சீரழிவுகளை கட்டுப்படுத்த வேலணையில் நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் (CCTV) கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று(21) தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்படுவதாக தவிசாளர் அறிவித்திருந்தார்.
நோக்கம்
அண்மைக் காலமாக வேலணைப் பிரதேசத்தில் சமூகவிரோத செயற்பாடுகளும், சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து வருவதாக பலதரப்பட்டவர்களிடமிருந்தும் சுட்டிக்காட்டப்பட்டுவரும் நிலையில் அதற்கான நடவடிக்கையை எடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய அமர்வின் போது சபையில் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படும், அத்தியாவசிய பிரச்சினைகள்,தேவைப்பாடுகள் குறிப்பாக குடிநீர், சுகாதாரம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய இடங்களில் CCTV கண்காணிபுக்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து சபையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |