தாய்வானில் திடீர் தீ 10 பேர் பலி
Taiwan
World
By Dilakshan
தாய்வானில் திடீர் தீ விபத்து காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தானது தாய்வானில் பிங்டங் நகரில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கோல்ப் பந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த தீ விபத்து தொடர்பான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு நீண்ட நேர போராட்டத்தின் பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்