யாழ் கடற்பரப்பில் கைதான 31 இந்திய கடற்றொழிலாளர்கள்...! பிறப்பிக்கபட்ட உத்தரவு

Vijay Indian fishermen Fishing Chennai Sri Lanka Navy
By Thulsi Nov 04, 2025 05:39 AM GMT
Report

புதிய இணைப்பு

வடபகுதி கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பருத்திதுறை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த 31 பேரும் 3 படகுகளுடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில், அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலை  

இதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட மேலும் 4 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

யாழ் கடற்பரப்பில் கைதான 31 இந்திய கடற்றொழிலாளர்கள்...! பிறப்பிக்கபட்ட உத்தரவு | Tck Leader Vijay Blame Srilankan Government

குறித்த நால்வர் தொடர்பில், சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், சந்தேகம் தீர்க்கப்பட்ட நிலையில், நாளைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 74 கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன இதே வேளை வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 40 படகுடன் 310 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - பிரதீபன்

முதலாம் இணைப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் (TVK) விஜய் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக கடற்றொழிலாளர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்

யாழ் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்

உடனடியாக விடுவிக்க வேண்டும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையளிக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள நம் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும்.

மற்ற மாநில கடற்றொழிலாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் கடற்றொழிலாளர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும்.

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அழுத்தமாக வலியுறுத்துகிறேன்

மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும்.

யாழ் கடற்பரப்பில் கைதான 31 இந்திய கடற்றொழிலாளர்கள்...! பிறப்பிக்கபட்ட உத்தரவு | Tck Leader Vijay Blame Srilankan Government

இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புலம்பெயர் தமிழர்களின் தமிழீழ கோரிக்கை..!  மறைமுக காய்நகர்த்தலில் அநுர அரசு

புலம்பெயர் தமிழர்களின் தமிழீழ கோரிக்கை..!  மறைமுக காய்நகர்த்தலில் அநுர அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026