அமெரிக்காவிற்கு வரலாற்றுப் படுதோல்வி - ஈரான் வீதிகளில் நடக்கும் கொண்டாட்டம்
போர் நிறுத்தச் செய்தியைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரானில் பல வாரங்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்து, மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நகரின் முக்கிய வீதிகளில் வாகனங்களில் சென்ற பொதுமக்கள், ஒலியெழுப்பியும் மகிழ்ச்சிக் குரல்களை எழுப்பியும் போர் நிறுத்தத்தை வரவேற்றனர்.
தெஹ்ரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'அசாடி சதுக்கத்தில்' (Azadi Square) ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஈரானியக் கொடிகளை அசைத்தபடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து தடையின்றி நடைபெறும்
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெற்றியை அறிவித்துள்ளதுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இது ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் படுதோல்வி" என்றும் கூறியதாக ஈரானிய தொலைக்காட்சி சேனலான பிரஸ் டிவி மேற்கோள் காட்டியுள்ளது.

ஈரானுக்கும் அதன் எதிரிகளுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து தடையின்றி நடைபெறும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்
இந்தப் போர் நிறுத்தத்தை ஈரானின் புதிய உச்சநிலைத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி அங்கீகரித்ததைத் தொடர்ந்து, இந்த இராஜதந்திர வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |