பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விகாரை விவகாரம் : தூண்டப்படும் இனவாதம்

Jaffna Gajendrakumar Ponnambalam Sri Lankan Peoples Dr.Archuna Chavakachcheri
By Shalini Balachandran Feb 03, 2025 10:42 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைதான் தற்போது சமூக வலைதளங்கள் உட்பட தமிழர் பிரதேசங்களில் பாரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

தையிட்டிப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு விகாரை திறக்கப்பட்ட 2023 மே 23 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தொடர் போராட்டங்கள் கண்டனங்கள் என்பன எழுந்த வண்ணம் உள்ளன.

இருப்பினும், முடிவிலியாக சரியான தீர்வு வழங்கப்படாமல் குறித்த விவகாரம் வளர்ந்துகொண்டே செல்லுகின்றது.

இந்தநிலையில், குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களுக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும் என கடந்த காலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என தமிழ் அரசியல் தலைமைகள் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இருப்பினும், எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படாத நிலையில் தற்போது இவ்விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த 31 ஆம் திகதி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம் தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு, அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.

இந்தநிலையில், ஆளுநர் கூறிய விடயத்திற்கு ஜனாதிபதி செவி சாய்த்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் (Ramanathan Archchuna) ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறான சூழ்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் “விகாரையை இடிக்க வாரீர்” என்ற தலைப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்ததாக துண்டுப்பிரசுரம் ஒன்று பரவி வருகின்றது.

இன்று காலையில் இருந்து இந்த துண்டுப்பிரசுரத்தினால் பாரிய சர்ச்சை கிளம்பியுள்ளது காரணம் தமிழர் பிரதேங்களை தாண்டி தென்னிலங்கை தரப்புக்களிலும் விகாரையை இடிப்பது முறையானதா என அந்த தரப்பு மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த துண்டுப்பிரசுரம் பலதரப்புக்களில் பரவி வருகின்ற நிலையில் இனவாதத்தை மக்களிடத்தில் தூண்டும் இவ்வாறான விடயங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் மக்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக தளத்தில் பரப்பப்படும் துண்டுப்பிரசுரம் போலியானது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், துண்டுப்பிரசுரம் பல தரப்புக்களில் பரவி வரும் நிலையில், தமது அரசியல் முன்னேற்றத்திற்காக தற்போது திட்டமிட்டு இவ்வாறான நடவடிக்கைகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கொள்வதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்களிடத்தில் இருந்து நோக்கும் போது, பாரிய சர்ச்சைக்குரிய ஒரு விடயம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைமையின் பெயரில் இவ்வாறான செய்திகள் பரப்பப்படும் போது அதை மக்கள் நம்புவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

அத்தோடு, குறித்த துண்டுப்பிரசுரத்தை உண்மை தன்மை அறியாமல் சமூக வலைத்தளங்களில் அதீக ஈடுபாடுள்ள அரசியல் தலைமைகள் மற்றும் மக்கள் என காலையில் இருந்து பகிர்ந்து வந்தனர்.

தற்சமயம் வரை அது போலி என அறியாத சிலர் எந்த நடவடிக்கைகளை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம், அது மக்களிடையேயான இனவாதத்தை தூண்டுவதற்கான வாய்ப்பாக அமையும்.

இந்தநிலையில், விகாரை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என தெரிவிக்கும் மக்கள், இனவாதத்தை தூண்டும் விதமான விடயங்களுக்கு அதீத கண்டனங்களையும் தமது சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெல்லுக்கு உரிய விலையை நிர்ணயம் - அரசிடம் செல்வம் எம்.பி கோரிக்கை

நெல்லுக்கு உரிய விலையை நிர்ணயம் - அரசிடம் செல்வம் எம்.பி கோரிக்கை

பாதுகாப்பு அமைச்சரின் பதவிக்கு வருகிறது ஆபத்து: நீதிமன்றத்தை நாடியுள்ள முக்கிய தரப்பு

பாதுகாப்பு அமைச்சரின் பதவிக்கு வருகிறது ஆபத்து: நீதிமன்றத்தை நாடியுள்ள முக்கிய தரப்பு

தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வாய்ப்பு: பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்...!

தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வாய்ப்பு: பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்...!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025