அரசாங்கத்தின் சரியான முடிவு! நவம்பரில் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்
மேலும் பத்து நாட்கள் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மிகவும் சரியானது என ராகம மருத்துவ பீடத்தின் மூத்த பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.
இந்த முறையில் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் வரும் நவம்பரில் மாற்றம் வரும், நவம்பருக்குள் நாடு அமைதியான நிலையில் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தினசரி பதிவாகும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,500 என்ற வரம்பை அடைந்தவுடன் நாட்டை மீண்டும் திறக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
1,500 என்ற எண்ணிக்கையை மருத்துவமனை அமைப்பு சமாளிக்க கடினமாக இருக்காது என்றும் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது தடுப்பூசி துரிதப்படுத்தப்பட வேண்டும்.
தடுப்பூசி மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தை அடையும் வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான பயணக் கட்டுப்பாடுகளை பராமரிப்பது முக்கியம்.
நாட்டைத் திறப்பதற்கு முன்பு தொடர்ச்சியான நடைமுறை சுகாதார வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துவது இன்றியமையாதது என்றும், இனிமேல் சுகாதாரத் துறை செயலில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
டெல்டா கடுமையான கொரோனா வைரஸ் திரிபு காரணமாக தடுப்பூசி துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.