தமிழர்கள் மீதான படுகொலை! 36 வருடங்களுக்கு பின்னர் அனுஸ்டிப்பு
இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆம் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன.
இதனை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதி சந்தியில் நேற்றையதினம் சனிக்கிழமை(20) மாலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் கல்முனை வாழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்கால சந்ததிகளின் நலன்
குறித்த நிகழ்வில் முதலில் விளக்கேற்றல் நடைபெற்றதுடன் தொடர்ந்து 1 நிமிட மௌன அஞ்சலி இறந்தவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சம்பவ நாட்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் எதிர்கால சந்ததிகள் நலன் கருதி தத்தமது உரைகளில் கருத்து வெளியிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

