அமெரிக்காவையே உலுக்கிய பயங்கர தாக்குதல்:இன்றுடன் 22 வருடங்கள்
உலக வரலாற்றில் பயங்கர தாக்குதலாக கருதப்படும் அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இந்த தாக்குதலை நினைவுகூரும் வகையில் இன்று அமெரிக்கா முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலானது செப்ரெம்பர் 11, 2001 அன்று 19 அல்-கொய்டா தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டது.
குறித்த நாளன்று 4 அமெரிக்க பயணிகள் விமானங்களை தீவிரவாதிகள் கடத்தினர்.
கடத்தப்பட்ட இரண்டு விமானங்கள் நியுயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரங்கள் மீதும் மற்றொன்று பென்டகனின் மேற்குப் பகுதியிலும் விழுந்து நொருங்கியது.
மற்றைய விமானம் பென்சில்வேனியாவில் விழுந்து நொருங்கி பின்னர் வெள்ளை மாளிகை அல்லது வோஷிங்டன் டி.சியை தாக்க வந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கருப்பு நாள்
இந்த தாக்குதல்களில், சுமார் 2,996 பேர் உயிரிழந்ததுடன் 25,000 பேர் காயமடைந்தனர்.

மேலும், 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா மதிப்பிட்டிருந்தது.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அல்கொய்தா மற்றும் அதன் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் ஒரு சுரங்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்த அமெரிக்கா அவரை இராணுவம் மூலம் கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இது அமெரிக்காவின் கறுப்பு நாளாக கருதப்படுகிறது.