சட்டவிரோதமான மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எட்டுப் பேர் கைது!
சட்டவிரோதமாக காசல்ரீ நீர் தேக்கத்தின் பாதுகாப்பு பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு காவல் பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமலால் தலைமையில் நேற்று (25) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 08 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 08 பேரும் மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ, ஹட்டன் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் 08 பேரையும் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் மேலதிக விசாரணைகளை ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





