இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 990,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் மொத்தம் 990,032 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் இந்திய நாட்டவர்கள் என்பதுடன், அவர்களின் எண்ணிக்கை 236,916 ஆகப் பதிவாகியுள்ளது.
ஏனைய நாடுகள்
இந்தியாவைத் தவிர பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், மே மாதம் முதலாம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் 113,755 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |