சுரேஷ் சலேவின் CID விசாரணை அறிக்கை! கோட்டாபயவுக்கு எதிராக அதிரடி உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவ அதிகாரிகள் இருவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு சுமை
இந்த உத்தரவை குடிவரவுத் தலைமை கணக்காய்வாளருக்கு தொலைநகல் மூலம் தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறை விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த நபர்கள் வெளிநாடு சென்றால், அது விசாரணைக்குச் சுமையாக அமையும் என்று குற்றப் புலனாய்வுத் துறை ஒரு மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
இந்நிலையில் தாக்குதல்களில் மூன்றாவது சந்தேக நபராக உள்ள முன்னாள் இராணுவப் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |