திருகோணமலை கடற்படைத் தளத்தில் ரகசிய சித்திரவதை கூடம்! சிஐடியின் அதிரடி நடவடிக்கை
திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் அமைந்துள்ள, “கன் சைட்” (Gun Site) என அறியப்படும் நிலத்தடி இரகசிய தடுப்புக்காவல் வளாகத்தை மூடி முத்திரையிட குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த தடுப்பு மையத்தில் சுமார் 60 நபர்களை ரகசியமாகத் தடுத்து வைத்து, அவர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கி, பிணைத்தொகை பறித்தமை உள்ளிட்ட பல கடுமையான குற்றச் செயல்களுக்கு இந்த இடம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆதாரங்கள்
இது தொடர்பான உத்தியோகபூர்வ ஆய்வை மேற்கொள்வதற்காக திருகோணமலை நீதவான் நாளை (18) அந்த இடத்திற்கு நேரில் விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே9VVB1L 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல நபர்களும் இந்த இரகசிய வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான கூடுதல் ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றுள், கேகாலையைச் சேர்ந்த சாந்த என்பவர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் தற்போது பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
ரகசிய வாக்குமூலங்கள்
மேலும், கொழும்பில் இரண்டு தமிழ் இளைஞர்கள் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலக்கம் 3 இல் அறிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், இப்பாகமுவவைச் சேர்ந்த பிரதீப் என்ற நபர் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் காணாமல் போனது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களும், அதன் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிலரும் தற்போது நீதவான் முன்னிலையில் ரகசிய வாக்குமூலங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |