டயர் வெடித்ததில் குடைசாய்ந்த பாரவூர்தி - வெடித்து சிதறிய பீப்பாய்கள்
மரக்கறி எண்ணெய் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுட்டுவ பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் எண்ணெய் கசிந்ததில் வாகனங்களின் போக்குவரத்திற்கு சிறிது இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் போது சாரதியுடன் உதவியாளரும் இருந்ததாகவும் இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து
இந்த விபத்து காரணமாக காலி நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு ஒழுங்கை முற்றாக மூடப்பட்டது. கொட்டாவையில் இருந்து பாணந்துறைக்கு மரக்கறி எண்ணெய் மற்றும் சில பொருட்களை ஏற்றிச் சென்ற போது, பாரவூர்தியின் பின் இடது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்ததாக காவல்தறையினர் தெரிவித்தனர்.
இதன்போது, குறித்த பாரவூர்தியில் இருந்த மரக்கறி எண்ணெய் பீப்பாய்கள் வெடித்து சிதறியதால், அதிவேக நெடுங்சாலையின் ஒருபக்க ஒழுங்கையில் எண்ணெய் முழுவதுமாக பரவியுள்ளது.
இந்த விபத்தில் லொறி மாத்திரமே பலத்த சேதமடைந்துள்ளதாகவும் நெடுஞ்சாலையில் உள்ள சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
