வெளிநாடொன்றின் ஜனாதிபதிக்கு எதிராக ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவு
வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
கடந்த செப்டம்பா் முதல் கரீபியன் பகுதியில் அமெரிக்க கடற்படை பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளது.
இது போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத அகதிகள் கடத்தலுக்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
பயங்கரவாதி
இருப்பினும், வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி மடூரோவின் அரசைக் கவிழ்க்கத்தான் கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க படை குவிக்கப்படுவதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வந்தது.
ஏற்கெனவே மடூரோவை போதைப் பொருள் பயங்கரவாதி என்று குற்றஞ்சாட்டியுள்ள ட்ரம்ப், அவரை பிடிக்க உதவுபவா்களுக்கு ஐந்து கோடி டொலர் சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இது ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு அமெரிக்கா அறிவித்த அதிகபட்ச சன்மானமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சூழலில், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் மடூரோவும் அவரின் குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் ட்ரம்ப் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த உத்தரவு, வெனிசுலாவின் 2024 தோ்தல்களுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |