ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த அழைப்பு! நெதன்யாகுவுக்கு பிறப்பிக்கப்போகும் உத்தரவு
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பி ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானைத் திருப்பித் தாக்க வேண்டாம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தான் கூறப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்தத் தாக்குதல் தற்போதைய இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு நிச்சயம் உதவாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு அழைப்பு
இது குறித்து மேலும் பேசிய ட்ரம்ப், "நாம் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிக அருகில் இருக்கிறோம். வரும் திங்கள், செவ்வாய் அல்லது புதன்கிழமைக்குள் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று நான் நம்பியிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

Image Credit: PBS
நீங்கள் ஏவுகணைகளை ஏவிவிட்டீர்கள், அது இத்துடன் போதும். இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி வந்து ஒப்பந்தம் செய்யுங்கள்" என்று ஈரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 13 மணி நேரம் முன்