ஈரானின் சொத்துக்களில் கைவைத்த அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு
போரினால் ஏற்பட்ட சேதங்களுக்காகப் பிராந்திய நட்பு நாடுகளுக்கு இழப்பீடு வழங்க அமெரிக்கா ஈரானிய சொத்துக்களைப் பயன்படுத்தக்கூடும் என்று வெளியான செய்திகளுக்கு ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், பிராந்திய அரசாங்கங்கள் ஈரானிடம் இழப்பீடு கோரும் தார்மீக நிலையில் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், ஈரானின் சொத்துக்கள் ஒன்றும் அமெரிக்காவுக்கான போர்க் கொள்ளைப் பொருட்களோ அல்லது அதன் நட்பு நாடுகளுக்குப் பணம் வழங்குவதற்கான ஒரு நிதியோ அல்ல என்று எக்ஸ் (X) தளத்தில் அவர் சாடியுள்ளார்.
ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்கள்
ஈரானால் ஏற்படக்கூடிய எதிர்காலச் சேதங்களைச் சரிசெய்யவும், உள்கட்டமைப்புகளைப் புனரமைக்கவும் ஈரானிய சொத்துக்களை அமெரிக்கா தனது வளைகுடா நட்பு நாடுகளுக்கு வழங்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

Image Credit: IRNA English
இந்த நிலையில், ஈரான் தரப்பில் இருந்து அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதேவேளை, சில வளைகுடா நாடுகள் தங்களின் நிலப்பரப்பை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்த அனுமதித்துள்ளதால், அந்த நாடுகள்தான் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கரிபாபாடி வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |