சிலாபம் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் இருவர் பலி!
Death
Police
Chilaw
Nuwara Eliya
SriLanka
By Chanakyan
விருந்து ஒன்றில் கலந்துகொள்ள சென்ற ஒன்பது பேர் கடலுக்கு குளிக்க சென்ற போது, அவர்களில் இரண்டு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சிலாபம் - மெவத்தை பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இவர்கள் கடலில் மூழ்கும் போது அதனை கண்ட மீனவர்கள் ஒருவரை மீட்டுள்ளதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டம் நானு ஓயாவை சேர்ந்த மருதை ராமசாமி மற்றும் விஸ்வநாதன் ஆகியோரை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் தும்மலசூரிய கைத்தொழில் பேட்டையில் இருந்து மெவத்தை பகுதிக்கு விருந்துக்கு வந்துள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்