பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் பயணம்
உக்ரைனுக்கு(ukrain) திடீர் பயணமொன்றை பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவிற்கு(russia) எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா(us), ஜேர்மனி(germany) உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது.ரஷ்யாவுக்கு எதிரான மூன்றாண்டு கால போரில் 45 ஆயிரம் வீரர்கள் பலியாகி உள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
சிறப்பான வரவேற்பு
இந்நிலையில், பிரிட்டன்(uk) வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி( David Lammy), உக்ரைனுக்கு இன்று(05) பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டின் கீவ் நகரை சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில், உக்ரைனுக்கு 55 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்குவதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என கூறப்படுகிறது.
இவற்றில், உலக உணவு திட்டத்தின் கீழ் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு உக்ரைன் நாட்டின் ரூ.32 கோடியே 87 லட்சம் மதிப்பிலான தானியங்களை அனுப்புவதும் அடங்கும்.
சிரியாவில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் ஆசாத், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் முன்பு கூட்டணியில் இருந்தபோது, ரஷ்யாவிடம் இருந்து தானியங்களை வாங்கியது. எனினும், ரஷ்ய ராணுவ படையெடுப்பின்போது ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் நிலத்தில் இருந்து, அதிக அளவிலான தானியங்கள் திருடப்பட்டு உள்ளன என இங்கிலாந்து கூறுகிறது.
நிதியுதவி திட்டத்தை அறிவிப்பார்
உக்ரைன் மீது ரஷ்யாவால் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் ஆற்றல் நிலையங்களை பராமரிப்பதற்கான பணிக்கு உதவவும், ரூ.148.61 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த மாதம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |