ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் வகுத்துள்ள வியூகம்
ரஷ்யாவின் உட்பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் தீவிரப்படுத்தி வரும் நீண்ட தூரத் தாக்குதல்கள், தங்களுக்கு சாதகமான மற்றும் சமமான நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எல்லைக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மற்றும் கடற்படைத் தளம் ஆகியவற்றின் மீது உக்ரைன் அண்மையில் நடத்திய வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் முதன்மையான போர் நிதி ஆதாரமாக விளங்கும் புதைபடிவ எரிபொருள் தொழிற்துறை கட்டமைப்புகளை முடக்குவதையும், அதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிரெம்ளினுக்கு அழுத்தம் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு, உக்ரைன் படைகள் கடந்த சில மாதங்களாக ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தினசரி அடிப்படையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
உக்ரைன் மக்களின் மன உறுதி
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் இணைந்து கீவ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெலென்ஸ்கி, "எந்தவொரு ராஜதந்திர வடிவத்திலும் ரஷ்யர்களுடன் சமமான நிலையில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: BBC
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் உக்ரைன் மக்களின் மன உறுதியை இத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய தாக்குதல்களின் அளவை உக்ரைன் மேலும் அதிகரிப்பது வெறும் காலத்தின் கட்டாயம்" மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |