ஈரானிய ஆயுதப் படைகளின் தாக்குதல்! அராக்சி வெளியிட்ட அறிவிப்பு
குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஒரு கப்பல் மீதும் ஈரானிய ஆயுதப் படைகள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கைகள் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போட்ஸ்வானா நாட்டின் கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் ஹெல்ஃபயர் ஏவுகணையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அந்த எண்ணெய் கப்பலை அமெரிக்கா செயலிழக்கச் செய்ததற்குப் பதிலடியாகவே, இந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீர்க்கமாக பதிலடி
இது தொடர்பாக எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர், பொதுமக்கள் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறுவதற்கும் அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தளங்களையே தங்கள் நாட்டுப் படைகள் குறிவைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: 1News.az
மேலும், ஈரான் மீது தொடுக்கப்படும் எந்தவொரு விரோதச் செயலுக்கும் உடனடியாகவும், தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |