ரஷ்யாவில் பரபரப்பு : புடினின் இரகசிய அரண்மனையை குறிவைத்தது உக்ரைன் ட்ரோன்(காணொளி)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இரகசிய அரண்மனை மீது தாக்குதல் நடத்த முயற்சித்த உக்ரைனின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரகசிய மாளிகை
ரஷ்ய அதிபர்கள் வேட்டைக்குச் சென்று, பின் விருந்தினர்களுக்கு விருந்துவைக்கும் இரகசிய மாளிகை ஒன்று Zavidovo என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த இரகசிய மாளிகை மீதே ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது.

இவ்வாறு சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் எரிபொருள் கிடங்கின் மீது வீழ்ந்து வெடித்து சிதறியுள்ளது.
வாக்னர் படைத்தலைவர் பிரிகோஜின் பயணம் செய்த விமானம்

வாக்னர் படைத்தலைவர் பிரிகோஜின் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலேயே இந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய தலைவரின் அரசு இல்லங்களை தாக்க

பிளாக் கேணல் என்று அழைக்கப்படும் சோவியத் இராணுவ தந்திரோபாயவாதியும் அரசியல்வாதியுமான ஆய்வாளர் விக்டர் அல்க்ஸ்னிஸ் தாக்குதல் முயற்சி தொடர்பில் தெரிவிக்கையில்,“ரஷ்ய தலைவரின் அரசு இல்லங்களை தாக்க உக்ரைனிய ட்ரோன்கள் மேற்கொண்ட இரண்டாவது முயற்சி இதுவாகும். "முதலாவது மே 3, 2023 அன்று கிரெம்ளினில் மேற்கொள்ளப்பட்டது."என்று தெரிவித்துள்ளார்.
A drone flying towards Moscow was shot down in the Tver region near the village of Zavidovo. One of Putin's residences is located there. pic.twitter.com/ji7GDhIRkh
— NEXTA (@nexta_tv) September 5, 2023
YOU MAY LIKE THIS