புதிய உச்ச தலைவரும் நீண்டகாலம் நீடிக்க மாட்டார்! ட்ரம்பின் அறிவிப்பால் ஈரானுக்கு பேரிடி
அயதுல்லா அலி கமேனிக்கு பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக வருபவர் அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “அவருக்கு எங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருக்கும். அந்த அனுமதி இல்லையெனில் அவர் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது,” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தனது நீண்டகால ஆட்சியாளரான கமேனிக்கு பதிலாக புதிய தலைவரை அறிவிக்கத் தயாராக இருக்கும் நிலையில், அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதில் தாமும் பங்கு பெற விரும்புவதாக ட்ரம்ப் பலமுறை கூறியுள்ளார்.
போருக்கு இட்டுச் செல்லாத தலைவர்
அமெரிக்க ஜனாதிபதி விமானமான Air Force One-இல் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மீண்டும் இந்த பிரச்சினைக்கு திரும்ப வேண்டாம் என்பதற்காகவே நாம் இதில் ஈடுபட விரும்புகிறோம்.

Image Credit: Brookings
தங்கள் நாட்டை போர் நோக்கி இட்டுச் செல்லாத ஒருவரை தலைவராக பார்க்க விரும்புகிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வாரம், ஈரானில் மதத் தலைவர் ஒருவர் தலைவராக வருவதற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“அது அந்த நபர் யார் என்பதையே பொறுத்தது. எனக்கு மதத் தலைவர்கள் மீது எதிர்ப்பு இல்லை. பல மதத் தலைவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன்; அவர்கள் மிகவும் சிறந்தவர்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |