செங்கடலில் பிரிக்கப்படும் அபாயத்தில் அமெரிக்க இராணுவ வளங்கள்! அதிர வைத்த ஹவுதிக்களின் தாக்குதல்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இது அமெரிக்காவுக்கு புதிய இராணுவ மற்றும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹவுதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரீ அல்-மசீரா தொலைக்காட்சியில் அறிவித்தபடி, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள “முக்கிய இராணுவ இலக்குகளை” இலக்கு வைத்து பல ஏவுகணைகளை ஏவியதாகத் தெரிவித்தார்.
ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அதிர்ச்சி: பென்டகனின் முக்கிய கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய உறுப்பினர்கள்
ஈரான் மற்றும் எதிர்ப்பு அச்சு
இந்தத் தாக்குதல் ஈரான் மற்றும் எதிர்ப்பு அச்சுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை இந்த ஏவுகணையை வெற்றிகரமாக இடைமறித்ததாக கூறியுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்த நிகழ்வு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், ஹவுதி கள் மீண்டும் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கினால், உலகளாவிய வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும்.
2023-2025 காலகட்டத்தில் ஹவுதிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக ரெட் சீ வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |