ஹவுதி கிளர்ச்சியாளர்களை தடுக்க இணைந்த பிரபல நாடுகள்: எச்சரிக்கை விடுத்துள்ள பைடன்

Joe Biden United States of America Rishi Sunak England
By Dilakshan Jan 12, 2024 06:41 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளன.

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குல்களினால் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய வர்த்தக கப்பல்கள் சென்றடைய தாமதமானது.

பிரான்சின் புதிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

பிரான்சின் புதிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்


வணிக பாதையின் சுதந்திரம்

இதன் காரணமாகவே ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தும் விதமாக பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தளங்கள் மீது நேற்றிரவு அதிரடி வான்வழித் தாக்குதலை இணைந்து நடத்தியுள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களை தடுக்க இணைந்த பிரபல நாடுகள்: எச்சரிக்கை விடுத்துள்ள பைடன் | Us President S Warning To Houthi Rebels Attack

தாக்குதல் தொடர்பில் அமெரிக்க அதிபர் கூறுகையில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தங்கள் பணியாளர்கள் மீதான தாக்குதலை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்ற தகவலை இந்த தாக்குதலின் மூலம் காட்டியுள்ளோம்.

மேலும், உலகின் மிக முக்கியமான வணிக பாதையின் சுதந்திரத்தை கெடுக்க நினைக்கும் எதிரிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.

ஏவுகணை தாக்குதல் 

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறும் போது, ஹவுதி படையினரின் தாக்குதலை அனுமதிக்க முடியாது, பிரித்தானியா எப்போது சுகந்திரமான வர்த்தக பாதைக்கு ஆதரவாக நிற்கும், எனவே தற்காப்புக்காக வரையறுக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.


இந்நிலையில், நேற்றைய தினம் பிரித்தானியாவும் இணைந்து போர் கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவற்றின் உதவியோடு ஏமன் தலைநகர் Sanaa Hodieda, Saada, மற்றும் Dhamar ஆகிய பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

அத்துடன், குறித்த தாக்குதலில் 5 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், 6 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனுக்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

உக்ரைனுக்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025