இலங்கை நோக்கி வரும் அமெரிக்க கப்பல்
இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தியா சீனா மற்றும் ரஷ்யா பொன்ற நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யை ஏற்றிய கப்பல் எதிர்வரும் மே மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கப்பல்
ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீனாவிலிருந்து முதலாவது எரிபொருள் கப்பல் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக ரஷ்யாவுடன் அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |