'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவுநாள்
தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தின் முதன்மை இராஜதந்திரி என்ற தகுதி நிலையை பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் (Anton Balasingham) 15 ஆம் ஆண்டு நினைவு இன்றாகும்.
தமிழர்தாயகத்தின் தேசிய இலட்சியத்தை முன்னிறுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பின் மதியுரைஞராக மூன்று தசாப்தகாலமாக உழைத்த அன்ரன் பாலசிங்கம் தமிழ்மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதை உறுதி செய்வதற்கான திம்புக்கோட்பாடுகளின் வடிவமைப்பாளராகவும் இருந்தார்.
தமிழ்மக்களின் அரசியல் இலக்குகளுக்கும் சர்வதேச செல்நெறிகளுக்கும் இடையே கடுமையான இராஜதந்திரபணியை செய்த மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் போராளிகளின் தளத்தில் பாலா அண்ணை என்ற விளிப்பு நிலையை பெற்றவராவர்.
சிறிலங்கா அரசாங்கங்கள் தமது பெருந்தேசியவாத இலக்குடன் தமிழ்மக்கள் மீது மேற்கொண்டுவந்த அடக்குமுறைகளை அனைத்துலக அரங்கிலும் வெளிப்படுத்தும் பொறுப்பையும் அவர் சுமந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.