பிள்ளையானுக்கு வழங்கப்பட்டுள்ள 400 துப்பாக்கிகள்! கம்மன்பிலவுக்கு எதிராக பொன்சேகா
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து தனக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறுமாறு, தடுப்பு காவலில் உள்ள பிள்ளையானுக்கு உதய கம்மன்பில அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்தமையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நினைவுபடுத்தியுள்ளார்.
தனது முகநூல் பதிவில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்திருந்த போதே இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கம்பன்பில மீதான அரசியல் சர்ச்சைகள் மேலோங்கியுள்ள நிலையில் அவர் இதனை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட முகநூல் பதிவில்,
உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு
பாதுகாப்பு அமைச்சின் மூலம் பிள்ளையானின் குழுவிற்கு 356 டி-56 (T-56) ரக துப்பாக்கிகள், 36 9மிமீ கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு மேஜிக்ரோ வகை துப்பாக்கி உட்பட மொத்தம் 400-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆயுதங்கள் இதுவரை பாதுகாப்பு அமைச்சகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதன்படி, தங்கள் கட்சிக்காரரை நீதிமன்றத்தில் வேண்டுமென்றே ஒரு பொய்யான வாக்குமூலத்தை அளிக்குமாறு சட்டத்தரணி ஒருவர் அறிவுறுத்துவது சட்ட நெறிமுறைகளை முற்றிலும் மீறும் செயலாகும் என்று சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இந்த நெறிமுறை மீறல் நடவடிக்கைக்கு உதய கம்மன்பிலவுக்கு எதிராக மேன்துறையீடு செய்ய முடியும் என்றும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |