அநுர ஜனாதிபதியானதற்கு பின்னணியில் ரணில் : பகிரங்கப்படுத்தும் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இல்லாவிடின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஜனாதிபதி பதவிக்கு வந்திருக்கமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) தெரிவித்தார்.
இலஞ்ச, ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரணில் விக்ரமசிங்க வரவழைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புண்ணியத்தால் தான் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானார். ரணில் இல்லையேல் அநுர இந்தப் பதவிக்கு வந்திருக்கமாட்டார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு
எனவே, பிரச்சார மேடைகளில் கூறப்படுவது போல் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் நம்பவில்லை. என்ன நடக்கின்றது எனப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் ஹர்ஷன ராஜகருணா மேலும் தெரிவித்தார்.
கடந்த 28ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
