இரும்பு கம்பியால் தாக்கி பெண் ஒருவர் கொலை !
மாத்தறையில் நேற்று பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொக்கரெல்ல - ரபர்வத்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கிக் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெஹல்கமுவ - இப்பாகமுவ பிரதேசத்தில் வசித்துவந்த 65 வயதுடைய பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை கொக்கரெல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, கண்டி - மஹங்கொட பிரதேசத்தில் கொலைச் சம்பவம் ஒன்று நேற்று (30) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் மற்றைய நபரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தால் அறுத்து பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.
பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் கண்டி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோது, உயிரிழந்துள்ளார்.
பொஹலியத்த - கலகெதர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
