இனிவரும் காலத்தில் யாழில் இருந்து அனுராதபுரம் மட்டுமே தொடருந்து சேவை!
Jaffna
Railways
By pavan
யாழ்தேவி தொடருந்து எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் 5 மாதங்கள் அனுராதபுரம் வரை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் முதல் வவுனியா வரையான தொடருந்து பாதை புனரமைக்கப்படுவதால், பணிகள் முடிவடையும் வரை தொடருந்து பாதை மூடப்பட்டிருக்கும்.
இதன் காரணமாக யாழ்தேவி தொடருந்து கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படும்.
வவுனியா வரை

அனுராதபுரத்தில் இருந்து வவுனியா வரை செல்ல தொடருந்து பயணிகளுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளது.
காங்கேசன்துறை முதல் முருகண்டி வரை சேவையில் ஈடுபடும் யாழ் ராணி தொடருந்து குறித்த 5 மாதங்கள் வவுனியா-முருகண்டி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்