சூதாட்ட உரிமையாளர்களுக்கான வரிச்சலுகை தொடர்பில் எட்டப்பட்டுள்ள முக்கியமான முடிவு!
சூதாட்ட உரிமையாளர்கள் எவருக்கும் எந்தவிதமான வரிச்சலுகையும் வழங்கப்படமாட்டாது எனவும், அவர்கள் தமது வருமானத்தில் 70 சதவீதத்தினை வரியாக செலுத்த வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (09) காலை ருவன்வெல்லவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கோரிக்கை விடுதந்திருந்தது
கொவிட் 19 தொற்றுக் காலத்தில் வரித் தொகை அறவீட்டினைக் குறைக்குமாறு பல சூதாட்ட நிறுவன உரிமையாளர்களால் கோரிக்கை விடுதந்திருந்தது மாத்திரமல்லாது, அந்த கோரிக்கையினை தற்போது எழுத்து மூலமாக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட நிறுவனங்கள் இதுவரை எந்தவிதமான விதிமுறைகளும் இல்லாமல் இயங்கி வந்திருந்தன, ஆனால் அவை இந்த ஆண்டு (2023) தொடக்கம் தமக்கென்ற விதிமுறைகளை நிறுவி அதன்படி செயற்படத் தொடங்கியுள்ளன.
வருமானத்திலிருந்து 70 சதவீதம்
அதுமாத்திரமல்லாமல், சூதாட்ட வியாபாரத்தை ஆரம்பிக்கும் போது 5 வருடங்களுக்கு பதிவு கட்டணமாக 500 மில்லியன் ரூபாவும் அறவிடப்படுகின்றது.

இந்நிலையில் சூதாட்ட உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம், அவர்களுக்கு எந்தவிதமான வரிச்சலுகையினையும் வழங்க முடியாது. என தெரிவித்துள்ளார்
அதுமாத்திரமல்லாமல், அவர்களின் வருமானத்திலிருந்து 70 சதவீதத்தினை வாரியாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்" அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்