ரஷ்யாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் - அவசரகால நிலை பிரகடனம்
புதிய இணைப்பு
ரஷ்யாவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு குரில் தீவுகளில் அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுனாமி ஏற்பட்டதையடுத்து ரஷ்யாவின் வடக்கு குரில் தீவுகள் மாவட்டத்தின் மேயர் அங்குள்ள “அனைவரும்” பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
ரஷ்யாவின் (Russia) கிழக்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Our partners @NWS_NTWC National Tsunami Warning Center have issued warnings and alerts for several coastal Alaska areas following the magnitude 8.7 earthquake in Kamchatka. Please be aware and follow tsunami evacuation guidance! pic.twitter.com/FYPrdUTYKl
— Alaska Earthquake Center (@AKearthquake) July 30, 2025
இன்று ஏற்பட்டுள்ள இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹவாய் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளதுடன், கடல் அலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவில் 2011 க்குப் பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
