யாழில் தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Child Abuse
By Kajinthan
யாழில் எட்டு வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (30-04-2026) இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவ பரிசோதனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாய்வழி உறவினரான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு மோசமான செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |