மத்திய கிழக்கு போர் : இலங்கையில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடி
மத்திய கிழக்கில் தொடரும் போர் தொடர்பான பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள், குறிப்பாக கப்பல் போக்குவரத்தைத் தடைசெய்யும் ஹோர்முஸ் நீர்வழிப்பாதை மூடப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், நாட்டில் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் சுமார் பதினைந்து சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாதிக்கப்படப்போகும் தரப்பினர்
மேலும், இந்தச் சூழலில், கீழ், நடுத்தர வர்க்கம் மேலும் பாதிக்கப்படும் என்றும், பல்வேறு நபர்களைச் சார்ந்திருக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உணவுப் பற்றாக்குறையானது குறிப்பாகக் குழந்தைகள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் பொருளாதாரப் பகுப்பாய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன
இந்தச் சூழ்நிலையிலும், அரசாங்கம் இன்னும் மக்களை முறையான சாகுபடிப் பிரசாரத்திற்கு அழைக்கவில்லை என்பது ஒரு தீவிரமான பிரச்சினை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
லக்ஸ்மன் கிரியெல்லவின் எதிர்வினை
இவ்விடயம் குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான லக்ஸ்மன் கிரியெல்ல, தற்போதைய சூழலில் மக்கள் பூந்தொட்டிகளில்கூட உணவுப் பயிர்களைப் பயிரிட ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இருப்பினும், இதுவரை அத்தகைய ஒரு நிலை காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேராதனை பல்கலை விரிவுரையாளரின் அறிவுரை
இது தெடார்பில் தனது கருத்துக்களைத் தெரிவித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல, தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கை இன்னும் அத்தகைய ஒரு நிலையை எட்டவில்லை என்று கூறினார்.

மத்திய கிழக்கில் போர் தொடர்ந்தால், நாட்டில் ஒரு பெரும் உணவு நெருக்கடியைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |