திருமலையில் அடையாளம் தெரியாதவர்களால் வீடொன்றுக்கு தீ வைப்பு
திருகோணமலையில் (Trincomalee) உள்ள வீடொன்றுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் வைத்த தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நிலாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் இன்று (14.04.2025) இடம்பெற்றுள்ளது.
முகைதீன் பிச்சை சேகாலம் என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
வீட்டின் உரிமையாளர் சம்பவ தினத்தன்று வீட்டில் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில், வீட்டின் சமயலறை பொருட்கள் உட்பட வீட்டு தளபாடங்கள் என பல பொருட்கள் நாநமாகியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் நிலாவெளி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் மேலதிக விசாரனைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
