சர்சையில் சிக்கிய மகிந்தவின் மனைவி

Sri Lanka Parliament Mahinda Rajapaksa Government Of Sri Lanka Sri Lankan Peoples Shiranthi Rajapaksa
By Dhilak Mar 21, 2025 12:04 PM GMT
Report

கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வு (சிஐடி) விசாரணை கோரியுள்ளதாக தொழிலாளர் துணை அமைச்சர் மகிந்த ஜெயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய ஜெயசிங்க, இது தொடர்பாக பதில் காவல் துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

இம்புல்கொட பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் துறவிகளுக்குச் சொந்தமான நிலங்களில் தான் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக சமீபத்தில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த போது அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அவசர அறிவிப்பு

லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அவசர அறிவிப்பு

நில விற்பனை

அதன்போது, பௌத்த விகாரைகளுக்கு சொந்தமானவை என கூறப்பட்ட நிலங்கள் தொடர்பான பத்திரங்களை வெளியிட்ட துணை அமைச்சர் மகிந்த ஜெயசிங்க, இம்புல்கொட மற்றும் மாகோல பகுதிகளில் உள்ள நிலங்கள் 2012 இல் வாங்கப்பட்டு 2023 இல் விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்சையில் சிக்கிய மகிந்தவின் மனைவி | A Land Case Involving Shiranthi Rajapaksa S Name

அதில் இஹல இம்புல்கொடவில் மகிந்த ராஜபக்ச ஆன்மீக அறக்கட்டளையின் கீழ் 2012 இல் ரூ. 500,000 க்கு வாங்கப்பட்ட ஒரு நிலம் ரூ. 10 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, அந்த நிலத்தின் உரிமையாளர் தங்காலை கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ச என்றும் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

விசாரணை

அத்தோடு, நில ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணைகளில், பத்திரங்கள் வரையப்பட்டு அலரி மாளிகையில் கையொப்பமிடப்பட்டு 2023 ஆம் ஆண்டு நுகேகொடையில் வசிக்கும் ஒருவருக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் தொழிலாளர் துணை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்சையில் சிக்கிய மகிந்தவின் மனைவி | A Land Case Involving Shiranthi Rajapaksa S Name

இந்த நிலையில், பௌத்த விகாரைகள் மற்றும் துறவிகளுக்குச் சொந்தமான நிலங்களில் தான் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக சமீபத்தில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த மகிந்த ஜெயசிங்க, அந்த நிலங்கள் சாதாரண குடிமக்களுக்குச் சொந்தமானது என்று கூறும் பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, அசல் உரிமையாளர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் பிரச்சினைகள் எழுப்பப்பட்டதால், நிலங்களின் உரிமை குறித்து விசாரிக்க தாம் அந்த நிலங்களுக்குச் சென்றதாகவும் துணை அமைச்சர் மேலும் கூறியள்ளார்.

பதவி விலகவில்லை..! காவல்துறை ஊடகபேச்சாளர் அதிரடி

பதவி விலகவில்லை..! காவல்துறை ஊடகபேச்சாளர் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015